Wednesday, November 16, 2011

எப்படி இருக்கீங்க?

வாசக நண்பர்களே...
எப்படி இருக்கீங்க?

தமிழ்ப் பூக்களில்
செய்திகள் போடவென
அதைத் திறந்து
ஆண்டு மூன்றாகிறது.

நண்பர் ஆபிதீன்
தன் பக்கங்களில்
இடம் தந்து எழுத அனுமதி தர...
இங்கே இயங்க
மறந்துப் போனேன்.

நாட்குறிப்புகள் என்றளவில்
எதையாவது
தினம் இரண்டு வரிகள்
எழுதலாம் என்றோர் ஆசை.
எந்த வழியிலேணும்
வாசகர்கள் முன்
என்னைத் திறக்கும் எண்ணம்
நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது.
பார்க்கலாம்.
-தாஜ்

2 comments:

மஜீத் said...

தினமும் வேண்டுமென்று அடமெல்லாம் பிடிக்கமாட்டோம்.

அடிக்கடி போடுங்கள்,
மனதில் தோன்றும் அனைத்தையும்
தோன்றியவுடனேயெ
போட்டால் போதும்

தாஜ் said...

தாஜ்

அன்புடன்
மஜீத்

அப்படியே ஆகும்.
ஆகணும்.

நன்றி
-தாஜ்