Tuesday, May 30, 2006

இப்பொழுது நாகூர் ரூமி.

நாகூர் ரூமியின் பன்முக ஆளுமையை வாசகர்கள் சமூகம் இன்றைக்கு பரவலாகஅறியத்துவங்கி இருக்கிறது. சிற்றிதழ்களில் அவர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தப்போது இப்படி விருச்சம் விட்டு தழைப்பாரென யூகித்தவர்கள் கம்மி.

கவிதை, சிறுகதை, நாவல், மொழிமாற்றக் கவிதை, மொழிமாற்றச் சிறுகதை, என்று இவரது புத்தகங்கள், ஆரம்பத்தில் நவீன இலக்கியம் சார்ந்து வந்தது. பின்னர் தன்னம்பிக்கைப்பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் கனத்த புத்தகங்கள் தந்தார். இந்தப் புத்தகங்களுக்குப்பிறகு காமராஜைப் பற்றி உயர்வான புத்தகம் ஒன்றும் எழுதினார்.இந்த காலக்கட்டத்தில்தான்பரவலான வாசகர்கள் அவரை பாக்கத் துவங்கினார்கள்.

வர இருக்கும் பகவான் ரஜினீஸ் பற்றியப் புத்தகமும், சூஃபிஸத்தைப் பற்றியப்புத்தகமும் இவரை இன்னும் கூடுதலாக அடையாளப் படுத்தும்.

மூவாயிர வருஷப் பழமையான ஹோமரின் இதிகாசத்தை எண்ணூறு பக்கங்களுக்குமேல் மொழி மற்றம் செய்து பதிப்பிற்குத் தந்திருக்கிறார். விரைவில் ஹோமரின் அந்த காவியத்தை நாம் தமிழிலில் படிக்க வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய மிகப் பெரியபணியாக இதை அவர் குறிப்பிடுகிறார். நிச்சயமாக இதற்குறியப் புகழ் அவரைத் தேடி அடையும்.

நவீன இலக்கியத்தில் இன்னும் கூடுதலாக தனது முத்திரையைப் பதிப்பாரெனஇலக்கிய வட்டம் நம்பிக்கை கெண்டிருந்த நாளில்தான் இஸ்லாத்தைப் பற்றிய எளியவிளக்கம் என்ற அவரது நூல் வெளிவந்தது. அதில் எனக்கு அவ்வளவாக உடன்படு இல்லை.

மனதளவில் நான், மதம் தாண்டிய நிலைப்பாட்டை ஒப்புக்கொள்பவன். இங்கேஇந்த உடன்பாட்டின்மை என் நிலைப்பாட்டைக் கொண்டது அல்ல.நவீன இலக்கியம் சார்ந்தஎந்த ஒரு எழுத்தாளரும் இப்படி மதரீதியான புத்தகம் எழுதி நான் பார்த்ததில்லை. ஏன் இப்படி என்றேன்? ஏன் தாஜ்...எல்லாமே எழுத்துத்தானே என்றார். நான் சமாதானமாகவில்லை.

'பதிப்பகத்தைச் சார்ந்த என் நண்பர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதித்தரப்பணித்தார்கள், அடிப்படையில் நான் ஆன்மிகவாதியானதால் ஒப்புக்கொண்டேன்' என்றார்.நான் சிரித்தேன். அந்த புத்தகத்திற்கு வலைத்தங்களில் எதிப்பு எழுந்தது. இது நான் எதிர்ப்பார்த்தகோணத்தில் நிகழ்ததல்ல. தன் முதுகை பார்க்கத் தவறுபவர்களின் எதிப்பாகப்போனது அது.பொருட்படுத்தவும் கூட தேவையில்லாமல் போய்விட்டது. இதில் பெரிய விசோசம் என்ன வென்றால்அந்த எதிப்பே அந்தப் புத்தகத்திற்கு போதுமான விளம்பரம் ஆகிப்போனதுதான். ஆன்மீகவாதிகள் தெளிவாகத்தான் திட்டமிடுகின்றார்கள்.

சமீபத்தில் ரூமியை சந்திதப்போது, தனது அடுத்தக் கட்ட முயற்ச்சிகளைப் பற்றிமனம் விட்டுப் பேசினார். அவர் நின்றப்படியே செல்லிக் கொண்டியிருக்க, நான் தலை உயர்த்தி அவரைப் பார்த்தேன். உட்கார்ந்திருப்பவன் பின் எப்படிப் பார்ப்பதாம்.

ஒரு வார இதழில் தொடர் கட்டுரை கேட்டிருப்பதாககூறி, அது வாசகர்களை கவரும் விதத்தில் அமையனும் என்று கவலைப் பட்டார். நாம் பத்து தலைப்புகள் தந்தால்தான், அவர்கள்அதில் ஒன்றை தேர்வு செய்வார்கள் என்றும் சொன்னார். பிறகு, தன்னிடம் சில தலைப்புகள்இருக்கிறது என்றும், வாசகர்களை கவரும் படியான சிலதலைப்புகளை நீங்களும்
யோசித்துச் சொல்லுங்கள் என்றார். தலையாட்டினேன்.

1.After Death.

2.நோபல் பரிசு வாங்கிய மேதைகள்.

3.ஆஸ்கர் பரிசுப் பெற்றத் திரைப்படங்கள்.

4.இந்திய இசை. (ரூமிக்கு இசையில் தேர்ச்சியுண்டு)

5.மதங்கள் பேசும் பாலியல் செய்திகள்.

6.கடலுக்குள் மூழ்கிய பண்டைய நகரங்கள்.

7.இந்திய கலைப் படங்களின் வரலாறு.

8.வரலாற்றில் பெண்களுக்காக நடந்த யூத்தங்கள்.

9.ஜீன் ஆய்வில்,இதுவரை வெளிவராத அடுத்தக் கட்ட வெற்றிகள்.

10. 3006 - ல் உலகம் / ஓர் தூர நோக்குப் பார்வை.

நான் எழுதிக் கொடுத்த தலைப்புகளை வாங்கிப் படித்துவிட்டு, என் முகத்தைப்பார்த்தார். அந்த இதழுக்கும் உங்கள் தலைப்புகளுக்கும் என்ன சம்மந்தம் என்பது போல் இருந்தது.

ரூமி ஒவ்வொரு அடியையும் கவனமாகத்தான் வைக்கிறார்.

***

- தாஜ்

2 comments:

Anonymous said...

Super color scheme, I like it! Keep up the good work. Thanks for sharing this wonderful site with us.
»

Anonymous said...

Nice colors. Keep up the good work. thnx!
»