Tuesday, May 30, 2006

Mind Vs Brain

சென்ற வாரத்தில் நண்பர்களைக் காண நாகூர் சென்றிருந்தேன். மத்திய விருந்துக்குப்பிறகு எங்களுக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் களைக்கட்டத் தொடங்கியது. நாங்கள் பாதிக்குப்பாதி என்ற அளவில் மட்டுமே ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் என்பதால், எந்த ஒன்றையும் சர்ச்சைக்குள் இழுத்து வைத்து நாங்கள் சர்ச்சித்தபோதும் எங்களுக்குள் ஒத்த தீர்வு ஏற்பட நேரம் பிடித்தது.பேச்சில் கொஞ்சம் சுற்றி வரவேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் எங்கள் விவாதம் Mind and Brain யைப் பற்றி நீண்டது.

இங்கே நாங்கள் என்பது நான்குபேர்கள். இருவர் Mind - யைப் பற்றிப் போசினார்கள்.அதை ஒரு தனிச்சையான செயல்பாடென்றார்கள். Brain தான் எல்லாம் என்றேன் நான். இன்னொரு நண்பரோ மெளனம் செய்துவிட்டார். எங்களை வோடிக்கைப் பார்ப்பதே அதிகமென அவர் நினைத்திருக்கலாம்.

Mind யைப் பற்றி போசிய நண்பர்கள் மனம்,இதயம்,ஆன்மா(soul) போன்ற பதப்ரயோகங்களையும் அர்த்தத்தில்தான் புழங்கினார்கள்.

Mind என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. Mind செய்வதாக கருதும் பணிகளை செய்வதும் மூளைத்தான்.

`மூளையின் தயவுடன் மாயையாக, நாம் நமக்குள் ஒர் நீதி துறையை ஆக்கி வைத்திருக்கிறோம். அதில் கீழ் கோர்ட் மேல்கோர்ட் போன்ற அடுக்குகள் , எதிர் எதிர் வழக்காட வழக்கறிஞர்கள் , நீதிபதிகள் என்பன எல்லாம் உண்டு. நாம் நமது சொயல்பாடுகளை அங்கே ஒவ்வொரு கணமும் நிறுத்தி தீர்வுகாண தவறுவதில்லை. அந்த தீர்வின் அடிப்படையில்தான் இலகுவான,கனிந்த அல்லது கடினமான செயல்பாடுகளை நாம் பெருகிறோம் . இதை தான் Mind என நாம் பிறித்துப் பார்க்கின்றோம்.

மேலும், இதயம் மனம் ஆன்மா யென நாம் குறிப்பிடும் அத்தனையும் நம்மால் உருவகிக்கப்பட்ட உருவகமே. காலாதி காலமாக இந்த உருவகத்தை மனித குலம் காபந்து செய்தப்படியே இருக்கிறது. நிஜத்தில் அப்படியான கூறுகள் நம் உடம்பில் இல்லை. ஹிருதய செயல்பாடு,சுவாசம், என்பதான ஒரு சில அனிச்சை செயல்பாடுகளைத் தவிர, மற்றைய உடல் இயக்கங்கள் அத்தனைக்கும் மூளைதான் பிரதானம்.

வாதிட்ட நண்பர்கள் என்னை ஒப்புக்கெள்ளவில்லை.மேலும் அழகாக கவிதையாய் அவர்கள் தங்களதுப் பக்கத்தை விவரித்தார்கள். அதற்க்கு மேலே என்னால் முண்ட முடியவில்லை. எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும்போல் இருந்தது, கூடவே புகைப் பிடித்தால் தேவலாம். வீட்டின் பின்புறம் போய்விட்டு வந்தேன்.

இப்பொழுது என் நண்பர்கள் மூவரையும் 'கஜல் புகழ்' குலாம் அலி ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்.ஆனால், அங்கே குலாம் அலி இல்லை, அவர் இசையும் கூட கேட்கவில்லை. எல்லாம் வெறும் பேச்சு. இப்பொழுது நான் வேடிக்கைப் பார்க்க அமர்ந்தேன்.

***

குறிப்பு: இந்த கட்டுரையை எழுதுகிறபோது Oxford mini dictionary யைப்பார்த்தேன் அதில் 'Mind' என்பதற்கு Ability to be aware of things and tothink and reason, originating in the brain என்று இருந்தது. பின் க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியை புரட்டினேன். அதில் 'இதயம்' என்பதற்கு மென்மையான உணர்வுகளுக்குஇருப்பிடமாக கூறப்பட்டிருந்தது. 'மனம்' என்பதற்கு ஒருவரின் எண்ணம், உணர்வு பேன்றவற்றிக்குகாரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது என்கிறது.

அந்த அகராதியில் 'மூளை' (Brain) என்ற பதத்திற்கு உடலின் செயல்பாடுகளைக்கட்டுப்படுத்துவதும் தொடுதல் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான மண்டையோட்டினுள்அமைந்திருக்கும் உறுப்பு என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

அவ்வளவுதான்.

இனி வாசகர்கள்தான் வெட்டியோ ஒட்டியோ அபிப்ராயங்களைச்செய்யனும்.செய்வீர்கள். நம்புகிறேன்.

***

-தாஜ்...

2 comments:

Anonymous said...

Really amazing! Useful information. All the best.
»

Anonymous said...

Nice! Where you get this guestbook? I want the same script.. Awesome content. thankyou.
»