
தந்தையின் காலம்.
------------------------------
- தாஜ்
*
என் பிள்ளைகள் 
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே படிக்கிறார்கள்.
*
வீட்டில் யென் 
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே 
படிக்கிறார்கள்.
*
மண்ணில் பாதம் 
பதியும் இதம் வேண்டி
காலணிகளை 
விட்டுச் செல்ல 
படிப்பால் 
தெளிகிறார்கள்.
*
குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற 
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.
*
என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்குப்
புலப்படாதது ஆச்சரியம்.
*
அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைப் பக்கங்கள்
விரிந்து கிடக்கிறது
இன்னொரு படிப்பாக.
*
காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை 
விரும்புவதில்லை 
சந்தோஷமாக இருக்கிறது.
******
 
No comments:
Post a Comment