Saturday, July 07, 2007

தாஜ் கவிதைகள் - 20



மதங்களின் குரல்கள்!

- தாஜ்..

*********

பாசிக்கிணற்றுத்

தவளைகளின்

பாதாளக் குரலை

ஒன்றுமில்லை என்றாக்கும்

குட்டைத் தவளைகளின்

சகதி சப்தம்.

கும்பிக் குளத்துத்

தவளைகள்

கெக்கலிக்கத் துவங்க

விண்ணை முட்டும்

ஏனைய சப்தமும்.

ஊர் அடங்கும்

நிசப்த வெளியில்

சமதளவாசிகளை நித்தம்

காதடைக்க வைப்பதே

இந்தத் தவளைகளின்

பிழைப்பாய் போனது.

******

satajdeen@gmail.com

No comments: