Thursday, April 26, 2007

தாஜ் கவிதைகள் - 15



தரிசனம்.
------------

உற்றுப் பார்க்கையில்
தட்டையாய்மொழுக்காய்
பள்ளம் மேடாய்
நீராய் உலகம்
கோலமே நிஜம்
தரிசித்த பாடில்லை.

*****

நிஜம்.
--------

நிலலெல்லாம்
நிஜத்தை
ஊர்ஜிதம் செய்ய
பொய்களெல்லாம்
உண்மையை உணர்த்த
இந்த சூனியத்திற்கும் கீழே
நீயும் நானும்
முன் வைப்பதென்ன.

******

விடாது கருப்பு.
---------------------

பக்கங்களாகப்
புரண்டு கொண்டிருக்கிறேன்
விரிந்த சமுத்திரம்
நித்தம் அலைக்கழிக்கிறது
தழுவ மேவித் தாவ
முழுகாத தினமில்லை
மனப்புணர்ச்சி நொடியும்
மங்காததோர் கிளர்ச்சி
வாசிக்கவே கரையேகி
கவிழ்ந்ததுவே காட்சி.

*******

பசி.
------

பசியாற்ற பறவை
இரைதேடும் உயரத்தில்
உயர உயர வட்டமிட்டு
விரைந்தே பறக்கும்
பார்வையை விஞ்ச
வியக்குமொரு நாழிகையில்
தேய்ந்து துகளாய் கலக்கும்.

*******

சக ஜீவிகள்.
-----------------

மிருக காட்சி சாலையில்
வினோத மிருகங்களையும்
மகிழ்வாய் கண்டுகழிக்க
திரும்பியத் தருணம்
சக மனிதர்களும்
உற்ற உறவுகளும்
வலம் வரவே
அங்கே ஒவ்வொன்றும்
கம்பிக் கூண்டுக்குள் இருக்க
பயமில்லாமல் போனது
நினைவுக்கு வந்தது.

*******
satajdeen@gmail.com

No comments: