Friday, April 10, 2009

தேர்தல்- 2009: நண்பரோடு பகிர்தல்- 1


தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்-1
*** ** *
வாழும் செய்திக் குறிப்புகள்.
------------------------------------
ன்டபுன்அ…….
ன்தீபிஆ
எழுதுவதற்கு ஒன்றுமில்லை.
எழுதாமலும் இருக்க முடியவில்லை.
எதுவும் இல்லாது போனாலும்
இன்றைய டைரியை எழுதலாம்.
கருணாநிதி உபயம்.
அவரது ஹாஸ்பிட்டல் டைரி
இப்பொழுது பத்திரிகையில் பிரபலம்.
நானும் எப்படியெல்லாமோ யோசிக்கிறேன்…
எதற்காக
கருணாநிதியின்
ஹாஸ்பிட்டல் டைரியை
பத்திரிகைகளில்
பிரசுரிக்கத் தருகிறார்கள்?
புரியலை சாமி!
சுப்ரமணியசாமியுடைய
அரசியலைவிட
கூத்தாக இருக்கிறது.
***
1. பா.மா.க. யாரோடு கூட்டு?
விஜயகாந்த் முடிவெடுத்துவிட்டாரா?
சிறுத்தைகளை
காங்கிரஸ் விழுந்து
பிறண்டாமல் இருக்குமா?
இஸ்லாமிய கட்சிகள்
எப்படியான வார்த்தைகளில்
முதலமைச்சரையும்,
அம்மாவையும் புகழப் போகிறது?
அவர்கள் இவர்களுக்கு
என்ன மாதிரி அல்வாவை
எந்தப் பதத்தில் கிண்டி
கொடுக்கப் போகிறார்கள்?
இவற்றை அறிய
நம் மக்கள் மத்தியில் நிலவும்
அசாத்திய மௌனம்
சாதாரணமானதல்ல!
‘த்ரில்’ கூடியதாக இருக்கிறது.
*
2. முதலமைச்சர்
ஹாஸ்பிட்டலில் இருந்து
007% உயிரோடு
சக்கர நாற்காலியில் உருண்டு வந்து
2009 பார்லிமெண்ட்
எலெக்சனை நடத்துவதென்பது
கின்னஸ் சாதனை!!
**** **** ***
satajdeen@gmail.com

No comments: