Tuesday, July 11, 2006

தாஜ் கவிதைகள்..3

நிஜத்தின் உண்மை.
**
உண்டு மகிழ்ந்த
என் கனவுகளில்
உயிர் வளர்த்தேன்.
உபாதைகள் காண
வைத்தியனை
நேர் கொண்டபோது
உணவை உண்டு
வாழப்
பழகென்றார்.

உயிர் வாழ
கொண்ட
உணவுதான் அது
விழுங்கியப் பொழுதிற்கு
எல்லாம் ஜெயம்
மனம் சிறகசைக்க
விண்ணில் பறந்ததும்
நிஜம்.

உபாதைகளின்
உபத்திரவம் அற
வைத்தியன் சொல்லே
வைத்தியம்.
முயற்சிக்க அவை
பல் வேறாக கிளைத்தது.

***
மீட்சி / 1988


மெளனம்.
**
தகித்தடங்கிய
எண்ணங்களைக்
கொட்டி
வார்த்தைகளால்
திரித்து
வரி வரியாய்
கடைந்தபோது
கிட்டிய ஈவின்
அமிர்த மொழி
கவிதையாய்
திரண்டதோர்
மந்திரம்.

***
கணையாழி / செப், 98

No comments: