Monday, November 17, 2008

தாஜ் கவிதைகள் - 34

காலத்தச்சனின் கைவண்ணம்.
--------------------------------------
-தாஜ்


ஆகிவிட்டது
மலையேறும் படலம்
நிசப்த வெளியில்
திட்டுத் திட்டாய்
தரையிறங்க மிரண்ட
புதர் மனிதர்கள்.
*
தோழமை பாவிக்க அவர்கள்
என் அருகாமை
விலாசங்களையே
எதிரொலிப்பாய்
சொன்னார்கள்.
*
புழுதிப் பாதைகளின் வழியே
கற்கப் போனது தொட்டு
கறுத்த தார் ரோட்டில்
நடந்து வளர்ந்து
மாற்றுப் பாதைகள் பிடித்து
வாகனங்களில் விரைந்து
நீலக்கடலையும் தாண்ட
நினைத்ததையும் கூட.
*
சுற்றுலா தலமெனப் போற்றும்
தற்கொலை முனை காண
எழுந்து நான் ஆயத்தமாக
காலடி மண்ணைத்தாண்டி
விசேஷமாய் அங்கே
எதுவுமில்லை என்றார்கள்
பார்வையில் குகையொன்று
வசீகரிக்கவே முண்டி
தலை நுழைத்தவனாக
நீண்டு ஒடுங்கிப்போனேன்.
***

satajdeen@gmail.com

No comments: