Saturday, April 18, 2009

தாஜ் கவிதைகள் - 36 / தேர்தல் ஸ்பெஷல்: மேடை


தேர்தல் ஸ்பெஷல்:
மேடை
----------
- தாஜ்
*
இரவில் சூரியன் உதிக்கும்
பகலில் சந்திரன் காயும்
பூக்காத செடி பூக்கும்
காய்க்காத மரமும் காய்க்கும்
எட்டிகூட இனிக்கும்
மலடி மட்டுமல்ல
குடுகுடு கிழவியும் பிரசவிப்பாள்.
கழுதைகளுக்கும்
தெரியவரும்
கற்பூர வாசனை
நரிகளெல்லாம் இனி
நாய்களாகும்!
வீடுகளைச் சுற்றிவரும்
கண்டவர்களுக்கும் வாலாட்டும்.
*
புல்லாங்குழலாய்
மயக்குகிறது
தூரத்தில் கேட்கிற ஊளை.
கூசும் ஒளி வெள்ளம்
இரவைப் பகலாக்க
மேடை போட்டாகிவிட்டது
பொறுத்திருங்கள்
பொதுத்தேர்தல் வருகிறது.
**** **** **

No comments: